சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி), கட்டுமானத்தின் கீழ் இருக்கும் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும், குடிபுக தயாராக இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு ஜி.எஸ்.டிலிருந்து விலக்கு உண்டு என்று இந்திய வீட்டுவசதி சந்தையில் ஒரு கருத்து நிலவுகிறது . எனினும், புதிய ஆட்சியின் ,ரியல் எஸ்டேட் சந்தையின் கீழ் வரி கணிப்புக்கள், அவ்வளவு எளிதாகஇல்லை .
உதாரணமாக, கட்டுமானப் பணிகளில் உள்ள சொத்தின் ,விற்பனை விலைக்கு மட்டுமே ஜிஎஸ்டி வரி, வீடு வாங்குவோருக்கு விதிக்கப்படும், ஆனால் டெவலப்பர்களால் கட்டுமான செலவின் தொகைக்கு மட்டுமே கடன் பெற முடியும். முழு திட்டத்திற்கும் உண்டான ஜிஎஸ்டி வரியை கட்டிடம் கட்டுபவர் செலுத்த வேண்டியிருக்கும் , ஆனால் அவர் வாங்கிய உள்ளீட்டு முதலானது கட்டுமான செலவிற்கு மட்டுமே உள்ளது, அதனால் கட்டுமான செலவில் 30 சதவிகிதத்திற்கும் குறைவான இடைவெளி இருக்கலாம்.இதன் விளைவாக, நீங்கள் ஒரு கட்டுமானப் பணியில் இருப்பதையோ அல்லது குடிபுக தயாராக இருக்கும் இடத்தையோ தேர்வுசெய்தால் ,இந்த இடைவெளியைக் கட்டுப்படுத்த ,அதற்கேற்ற விகிதத்தில்,டெவெலப்பர் விலையினை உயர்த்துவார்.
டெவலப்பர்களால் விற்பனை செய்யப்படும் குடியிருப்புகளுக்குண்டான ஜிஎஸ்டியின் பாதிப்பு
- குடிபுக தயாராக இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது ஆனால் டெவெலப்பர் தன் கட்டுமான செலவுகளுக்கு மட்டுமே உள்ளீட்டுக் கடன்கள் கிடைக்கும் .
- டெவலப்பர்கள் திட்டத்தின் செலவிற்குண்டான ஜிஎஸ்டியை செலுத்த வேண்டும்.
- ஜிஎஸ்டி இணக்கத்தினால், குடியிருப்புகளின் விலை அதிகரிக்கும்.
- குடிபுக தயாராக இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு வசூலிக்கப்படும் காப்பீடு, ஜிஎஸ்டியிலிருந்து எந்த நன்மையையும் ரத்து செய்யப்படும்.
பிரவீன் ஜெயின், நொய்டாவில் ஒரு வீட்டை வாங்குபவர் , அவருடைய டெவலப்பர் அவரிடம் , 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டின் மொத்த செலவு இப்போது 1 லட்சம் ரூபாய் அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
ஜிஎஸ்டி வரி கட்டமைப்பை எளிமையாக்குவது என்றால் ஒரு நாட்டில் ‘ஒரு நாடு , ஒரு வரி’ என்று அறிமுகபடுத்திகொண்ட ,பின்னர் , ஒரு வீடு வாங்குபவர், கட்டபட்டுக்கொண்டிருக்கும் கட்டடத்திற்காக செலுத்தப்படும் ஜிஎஸ்டிவரியுடன் அதற்கும் மேல், முத்திரை கடமையையும் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது எப்படி என்று அவர் ஆச்சரியப்படுகிறார்.
குடிபுக தயாராக இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு சேவை வரி பொருந்தாது , என்றாலும் கூடவீட்டினை ஒப்படைக்கும் பொது டெவலப்பர்கள் விலையை அதிகரிக்கிறார்கள்.ஜிஎஸ்டி செயல்படுத்தப்பட்டதின் மூலம், வீடு வாங்குவோர் பயனடைய மாட்டார்கள், ஏனென்றால் கட்டுமான கட்டத்தில் ஜிஎஸ்டியின் இணக்கம் காரணமாக டெவலப்பர்கள் விலையை அதிகரிப்பார்கள்” என ஜெயின் குறை கூறுகிறார்.
ரியல் எஸ்டேட் சந்தையில் ஜிஎஸ்டியின் வரி தாக்கம்
இருப்பினும், கட்டுமான தொழில் பங்குதாரர்கள், ஜிஎஸ்டி ஆட்சி முறையில் வீடு வாங்குபவர்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.கட்டுமான செலவு குறையம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், டெவெலப்பர்களுக்கு உள்ளீடு கடன் கிடைப்பதுடன்,ஆக்கிரமிப்பு சான்றிதழ் (OC)வழங்கிய பின்னர் ,வீட்டினை வாங்குபவர்கள் ,தற்போதைய சந்தையில் ஒப்பந்தத்தின் பகுதியாக இருக்கும் கூடுதல் வரிகளை ஏற்கவேண்டிய அவசியமில்லை .
தற்போது CRISIL(கிரீஸில் ) அறிக்கையின் படி , ஒரு டெவெலப்பர் கலால் வரி மற்றும் வாட்வரிகளை , சிமெண்ட் மற்றும் எஃகு போன்ற உள்ளீடுகளுக்கு முறையே 27.7% மற்றும் 18.1% செலுத்துகிறார் .தற்போது ஜிஎஸ்டியின் கீழ், சிமென்ட் மற்றும் எஃகு ஆகியவைகளுக்கு முறையே 28 சதவீதமும், 18 சதவீதமும் வரி விதிக்கப்படடுகிறது . வண்ணப்பூச்சு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் போன்ற மற்ற உள்ளீடுகளுக்கு 28 சதவீத வரி விதிக்கப்படும். இருப்பினும், இறுதி தயாரிப்பாக – வீட்டுப் பிரிவு – 12 சதவீதத்திற்கு வரி விதிக்கப்பட்டு , உள்ளீடுகள் மீது செலுத்தப்படும் வரிகளுக்கான கடனாக வழங்கப்படும்.நிலம் உட்பட மொத்த செலவில் 12 விழுக்காடு வரி விதிக்கப்படும், டெவலப்பர்களுக்கான உள்ளீட்டுக் கடனை வழங்குவதற்கு இந்த அளவு போதுமானதாக இருக்கும். எனவே, ஒரு வீடு வாங்குபவர், குடிபுக தயாராக இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்புகளை , தேர்வு செய்யும் பொழுது வரி சுமையிலிருந்து காப்பாற்றப்படுகிறார் .
பங்குதாரர்கள் புதிய வணிக மாதிரிகளை மதிப்பிடுவதற்கு ஜிஎஸ்டி தூண்டுகிறது
முதலீட்டு வங்கி நிறுவனமான மன்டரஸ் பங்குதாரர்களுடன் ,நிர்வகிக்கும் பங்குதாரர், நவ்ஷத் பஞ்ச்வானி, குடியிருப்பு திட்டத்திற்கான ஆக்கிரமிப்பு சான்றிதழ் (o c ) பெறப்பட்டுள்ளது என்றாள் ஜிஎஸ்டி பொருந்தாது என்று சுட்டிக்காட்டுகிறார் .அவர் , உள்ளீட்டு கடன் வசதியால் டெவலப்பர்களின் செலவுகள் கீழே வரும் ,ஆனால் அதில் இன்னும் பல தெளிவு தேவை என்று உணர்கிறார்.
“சிறிய சப்ளையர்கள், அவர்களின் ஆண்டு வருவாய் 75,000 ரூபாய்க்கு கீழ் இருந்தால், ஜிஎஸ்டி பதிவு செய்ய வேண்டியதில்லை. இத்தகைய சந்தர்ப்பங்களில், பில்டர் எந்த ஆதாயமும் பெறயியலாது , அதனால் அவர் கணக்கில் மிக கவனமாக இருக்க வேண்டும். எனவே, அவர்கள் ஜிஎஸ்டி பதிவுசெய்தவர்களிடமிருந்து இருந்து வாங்க விரும்பலாம். எனவே சிறிய விற்பனையாளர்கள் , வியாபார இழப்பு மூலம் பாதிக்கப்படுவர்” , என்று பஞ்ச்வானி விளக்குகிறார்
ஹேவேலியா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் நிகில் ஹேவேலியா , டெவலப்பர்கள் ஏற்கனவே ‘கட்டும் மற்றும் விற்பனை’ மாதிரியின் நன்மைகளை மதிப்பிடுவதாகக் கூறுகிறார்கள். அவரை பொறுத்தவரை, புதிய வரி அமைப்பு மற்றும் பிற கட்டுப்பாட்டு கட்டமைப்பின்கீழ்,குடிபுக
தயாரான அடுக்கு மாடி குடியிருப்புகளை வழங்கும் ஒரு சந்தையில், வீடுவாங்குபவர்,பில்டர் இருவருக்குமே அதிக அர்த்தம் தருகிறது.
“கட்டபட்டுக்கொண்டிருக்கும் கட்டுமானத் திட்டங்களில் உள்ள வீடுகளை வங்கநினைப்போர் பலர் ,அடுத்த காலாண்டில் பொருந்தக்கூடிய 12 சதவிகித ஜிஎஸ்டி வரியை சேமிப்பதற்காக அவர்கள் தமது மீதி உள்ள தவணைத்தொகையை முன்னரே கட்டமுடியுமா என்று வினவுகின்றனர் “என்று ஹேவேலியா கூறுகிறார் .
நிதியியல் சேவைகளுக்கும் ஜிஎஸ்டி 18 சதவிகிதம் பொருந்தும். எனவே, ஜிஎஸ்டி யின்கீழ் கடன் செயலாக்க கட்டணங்கள் அதிகரிக்கும்.
அத்தகைய கட்டணங்கள் எப்போதும் வாங்குபவர் கைகளுக்கு ஒரு செலவாகவே இருக்கிறது. மலிவு விலை வீட்டுப் பிரிவுகளில் இது தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏனென்றால் 18 சதவிகிதம் நடைமுறை கடன் செயலாக்கக் கட்டணத்தைக்காட்டிலும் 1 சதவீதம் வரம்பு என்பது, நடைமுறையில் மிகக் குறைவாகவே இருக்கும். எனினும்,அது நிச்சயமாக உயர் – இறுதி பிரிவு வகை வீடுவாங்குவோரின் பைகளை சுடும். .
(எழுத்தாளர் தலைமை நிர்வாக அதிகாரி, ட்ராக் 2ரியாலிட்டி )